இது எல்லாத்தையும் விட february ,march வந்தால் பரீட்சை சீசன்..எல்லா வீட்டிலயும் இது ஒரு மேளா தான்..

குழந்தைகள் முதல் பெரியவர் வரை..இது ஒரு tension காலம்..
ஏன் பெரியவர் வரைனு சொல்றேனா.. October மாசம் விடிகார்த்தால American embassy வாசலிலெ queue நிக்கறமாதிரி நின்னு வாங்கின ஸ்கூல் அப்ளிகேஷனுக்கு நேர்முக தேர்வு பெற்றோருக்கு நடக்கும் நேரம்..
பழைய G.K புத்தகங்கள் எல்லாம் தூசி தட்டி எடுத்து விழுந்து விழுந்து படிக்கும் தாய் தந்தை குலங்கள் எத்தனையோ..
இதுக்கு அடுத்தது.. பத்தாம் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருக்கும் வீடுகள்..
வருஷம் முழுதும் இந்த வீடுகளில் திகில் படம் ஓடும்..
எல்லா மூலை முடுக்குகளிலிருந்தும் அறிவுரை மழை பொழியும்..
வேற யாருக்கு.. அம்மா அப்பாவுக்கு தான்..!!!!
குழந்தைகள் மனம் கோணாமல் நடப்பது எப்படினு வகுப்புகள் நடக்கும்..
பள்ளிக்கு வருகிற counselling மக்கள் எல்லாம் .. குழந்தைகளுக்கு டென்ஷன் இல்லாமல் relaxed ஆக தேர்வை சந்திப்பது எப்படி, அதை விட முக்கியமாக நீண்ட நேரம் படிக்கும் போது இடை இடையே பிடிச்ச விஷயங்களில் மனம் செலுத்துவது எப்படி என்று அழகாக சொல்லி தருகிறார்கள்.."பிடிச்ச பாட்டை கேளுங்க இல்ல ஒரு படம் வரைஞ்சு பாருங்கனு positive advice கொடுக்கிறார்கள்..
இந்த நேரத்தில் நான் பரீட்சைக்கு படித்த காலங்கள் நினைவுக்கு வருகிறது...ஒரு சின்ன flash back..
அப்பொதெல்லாம் தூர்தர்ஷனில் கூட பரீட்சை சமயங்களில் "குலேபகாவலி"," ஒளவையார்" "மந்திரிகுமாரினு அதர பழசு படங்கள் தான் திரையிடப்படும்..
ஆனா.. நமக்கு அந்த நேரத்தில " முதியோர் கல்வி, வயலும் வாழ்வும் நிகழ்ச்சிகளெல்லாம் படு intersting ஆ பார்க்க தோணும் ..
அதே போல எல்லா தேர்வின் போது பரீட்சை ஹால் போகும் முன் நான் படித்த பள்ளி கிறிஸ்த்துவ பள்ளி என்பதால் church ல் special prayer நடக்கும்..
பய பக்தியோட பாதிரி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி போன நாட்கள் அவை....
அடுத்தது மேல் படிப்பு என்ன படிக்கணும்னு பெற்றோரும் மற்றோரும் கூடி பேசி நல்லது எதுனு நமக்கு சொல்லி கொடுத்த அன்றொரு காலம்..
இன்றைய இளைய தலைமுறைகள் மிக தெளிவான ஒரு பார்வையில், பாதையில் நாம் என்ன செய்ய போகிறோம் அதற்கு என்ன தேவை என்பதை நன்றாய் உணர்ந்து .. தன் திறமைக்கு ஏற்ற வழி எது என்ன என்பதை நன்கு ஆராய்ந்து செயல் படும் நிலை இப்போது..

உங்கள் எல்லாருக்கும் மிக நல்ல வாய்ப்புகள் கிட்டி உயர்ந்த நிலை அடைய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் ..
AR.Rahman பாணியில்.."எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே..
"மாணவன் மனது வைத்தால்".. என்று இந்த நல்ல எழுச்சி தரும் பாட்டுடன் ...
அத்தனை மாணவ சமூகத்திற்கும்
I WISH YOU ALL A VERY GOOD LUCK IN YOUR EXAMS..
akilacsr

.jpg)